வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முனைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகே வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38 -ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முனைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
கமுதி அருகே வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38 -ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முனைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் இரவு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. கடந்த புதன்கிழமை காலை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி எடுத்தும் தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கமுதி-மதுரை சாலையில் ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை அகத்தாரிருப்பு கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
Advertisement