சிவகங்கை

மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு; 10 வட மாநில பக்தர்கள் காயம்

DIN

மானாமதுரை அருகே வியாழக்கிழமை வடமாநில பக்தர்கர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 10 பேர் காயமுற்றனர்.
  வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் காரில் ராமேஸ்வரம் சென்றனர். மானாமதுரை அருகே முத்தனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக வடமாநிலத்தவர்கள் வந்த காரின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது சாலையில் நடந்து சென்ற அன்னியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சோணை என்பவர் மீது கார் மோதியது. இதில் சோனை உயிரிழந்தார்.  இவ்விபத்தில் கார் கவிழ்ந்ததால் அதில் வந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT