சிவகங்கை

இளையான்குடி அருகே மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது

DIN

இளையான்குடி அருகே மயிலை  வேட்டையாடிய 3 பேரை நாட்டுத் துப்பாக்கியுடன் வனத் துறையினர் திங்கள்கிழமை கைது  செய்தனர்.
          இளையான்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிகளில்  திங்கள்கிழமை அதிகாலை சிலர் வேட்டையாடுவதாக சிவகங்கை மாவட்ட வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,வனவர்  செல்வமணி, வனக் காப்பாளர்  மலைச்சாமி, வனக் காவலர் தங்கச்சாமி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
       சோதனையில், விழுப்புரம் மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த கார்த்திக்(30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாண்டி(35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி (28) ஆகியோர் நாட்டு துப்பாக்கியுடன் மயில்களை வேட்டியாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
   இதையடுத்து மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மயில் மற்றும் நாட்டு  துப்பாக்கி, ஒளிவீசும் விளக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT