சிவகங்கை

மானாமதுரையில் குடிநீர் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை குடிநீர் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
  பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  இதில், பங்கேற்ற சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென கோஷம் எழுப்பிச் சென்றனர்.
மேலும் நகரில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
  பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன்,உடற்கல்வி ஆசிரியர் ராபின்சிங் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT