சிவகங்கை

காரைக்குடியில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தேர்வு

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் சார்பில், இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புத் துறைக்கான பணியாளர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் சுமார் 11,206 பேர் பங்கேற்கின்றனர். இதற்காக, காரைக்குடியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையுடன் காலை 9 மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்வு நடைபெறுவதையொட்டி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சாரட்கர், சிவகங்கை எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், தேர்வுக்கு உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT