சிவகங்கை

"காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் வணிகர் சங்கங்களின் ஆதரவு தொடரும்'

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகளுக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு தொடரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 3-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு வரும் மே 5 ஆம்  தேதி சென்னையில் நடைபெற  உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
 ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள குழப்பங்களை நீக்கி வணிகர்களுக்கு விதிக்கப்படும் வரியை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT