சிவகங்கை

கல்லூரியில் இளைஞர் எழுச்சி விழா

DIN

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நாட்டுநலப் பணித்திட்டமும், உலகமளாவிய இதய நிறைவு தியானப் பயிற்சி மையமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்ததின விழாவையொட்டி இளைஞர் எழுச்சி விழா எழுமின் என்ற தலைப்பில் கொண்டாடின.
 கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதயநிறைவு தியானப்பயிற்சியாளர்கள் குமார், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாகராஜன் வரவேற்றார். இவ்விழாவில் 750 மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கு இதயநிறைவு தியானப் பயிற்சியும், தனிமனித மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பி.ராஜேந்திரன், பி.நாராயணசாமி, இதயவர்மன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT