சிவகங்கை

காரைக்குடி அருகே வீட்டில் தங்கமோதிரம், பணம் திருட்டு: வேலைக்காரப் பெண் கைது

DIN

காரைக்குடி அருகே வீட்டு அலமாரியில் வைத்திருந்த தங்க மோதிரம் மற்றும் பணத்தைத் திருடியதாக வேலைக்காரப் பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோட்டையூர் வெங்கடாசலம் செட்டியார் தெருவைச்சேர்ந்தவர் ராமசாமி (92). இவர் வெளியில் சென்றிருந்தபோது வீட்டில் அலமாரியில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம், தங்க மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்து பள்ளத்தூர் காவல்நிலையத்தில் ராமசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், ராமசாமி வீட்டில் வேலை செய்துவரும் கோட்டையூர் நந்தவனம் வீதியைச் சேர்ந்த அமுத வள்ளி (36) என்பவர் ரூ.3 ஆயிரம் ரொக்கம், முக்கால் பவுன் மோதிரத்தை திருடியிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT