சிவகங்கை

பெண்ணிடம் மோசடி: காரைக்குடி மென்பொருள் நிறுவன உரிமையாளர் கைது

DIN


காரைக்குடியில் பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசடி செய்த இளைஞர், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து (31).இவர்,காரைக்குடி வருமான வரித்துறை அலுவலகம் அருகே மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின்(27) என்பவர் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். காளிமுத்து, ஜோஸ்பினை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவரிடமிருந்து ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ரொக்க பணமும்,11 பவுன் தங்க நகையும் பெற்றாராம்.
இந்நிலையில், காளிமுத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு பெண்ணை புதன்கிழமை (நவ.14) திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஜோஸ்பின் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் காளிமுத்து மீது வழக்குப் பதிந்து, அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT