சிவகங்கை

ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

DIN

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் பயண நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது   ‌w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n
 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும், விண்ணப்பித்தலுக்கான நிபந்தனைகள்,வழிமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ் இணைப்புகளுடன் அஞ்சல் மேல் உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்" என்று குறிப்பிட்டு மேலாண்மை 
இயக்குநர்,தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால் பாரம்பரிய கட்டடம்(முதல் தளம்), சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT