சிவகங்கை

சிவகங்கையில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் காசி முன்னிலை வகித்தார்.  இதில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும். காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் சேகர், மல்லிகா, இணைச் செயலர்கள் சுந்தரம், ஹனிபா உள்ளிட்ட ஏராளமான மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT