சிவகங்கை

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

DIN

திருப்பத்தூர் ஒன்றியம், புதுவளவில் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்ததை அடுத்து, அதை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      காரையூர் ஊராட்சி புதுவளவு கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்து செயலிழந்தது. இதனால், மின் வாரியத் துறையினர் மாற்று ஏற்பாடாக காவனூரிலிருந்து மின் இணைப்பு வழங்கினர். அதில் குறைந்த மின் அழுத்தத்தில் மின்விநியோகம் கிடைப்பதால்,  அப்பகுதியினர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
    வழக்கம்போல், மின்னணு பொருள்களை பயன்படுத்த முடியவில்லை. மேல்நிலைத் தொட்டிக்கு நீரேற்ற முடியாததால், பக்கத்திலுள்ள கண்மாயில் தேங்கிய நீரை எடுத்து குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால், சேதமடைந்த மின்மாற்றியை  விரைவாக சீரமைக்க கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT