சிவகங்கை

மானாமதுரை தொகுதியில் ரூ.5 லட்சம் பறிமுதல்

DIN

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினரிடம் ரூ.1 லட்சத்தை  தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.திமுக பிரமுகரிடம் ரூ.4 லட்சத்தை கைப்பற்றினர்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், இளையான்குடி அருகே உள்ள முடவேலி கிராமத்தில் திமுக பிரமுகர் வினோத் என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் எதுவும் கிடைக்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். 
இதே பகுதியில் உள்ள கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சண்முகம் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், உரிய ஆவணமின்றி இருந்த ரூ. 4 லட்சத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர். 
திருப்புவனம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வெளியூர் அதிமுக பிரமுகர் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித்துறையினர் அந்த விடுதிக்குச் சென்று அதிமுக பிரமுகர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டனர். இதில் எதுவும் சிக்காததால் வருமானவரித்துறையினர் திரும்பிச் சென்றனர். 
மானாமதுரையில் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அமமுக, அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை செய்ய ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்ற வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அந்த வீடுகள் வரை சென்றுவிட்டு சோதனை நடத்தாமல் திரும்பினர். 
மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  பறக்கும்படையினர் அங்கு சென்று ரூ. ஒரு லட்சத்தை கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT