சிவகங்கை

பழையனூர் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வரலெட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அன்று மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது.அதன்பின், காலை 9.30 மணியளவில் மூலவரின் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து,காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் பழையனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT