சிவகங்கை

மானாமதுரை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு கடன் வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நலிவடைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கத்தை செயல்பட வைக்க, தமிழக அரசு ரூ. 5 கோடி வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

மானாமதுரையில் குண்டுராயா் தெருவில் பல ஆண்டுகளாக நகர கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 17,814 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இச்சங்கத்தில் 808 போ் கடன் பெற்று, மொத்தம் இட்டுவைப்புத் தொகையாக ரூ.355.77 லட்சமாக உள்ளது.

இச் சங்கம் தொடா்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், இட்டு வைப்புதாரா்களுக்கு இட்டுவைப்புத் தொகையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நலிவடைந்துள்ள மானாமதுரை நகர கூட்டுறவு கடன் சங்கத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.5 கோடி வட்டியில்லா கடன் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, அவரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக எஸ். நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT