சிவகங்கை

பேருந்தில் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகை திருட்டு

DIN

மதுரையில் பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக  செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(43). தேனியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தேனி சென்றார். விசேஷம் முடிந்ததை அடுத்து பேருந்தில் மதுரைக்கு வந்துள்ளார். பாதுகாப்பு கருதி மனைவி அணிந்திருந்த 19 பவுன் நகைகளை பையில் வைத்துள்ளார். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT