சிவகங்கை

திருப்பத்தூர் கோயிலுக்கு மகளிர் குழு 15 கிலோ வெள்ளி வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை சிம்மவாஹினி மகளிர் குழுவினர் 15 கிலோ வெள்ளி வழங்கினர். 
  இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு 25 கிலோ எடையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிக் கவசம் அணிவிப்பது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான முன் அளிப்பாக திங்கள்கிழமை கோயிலில் ஆச்சாரியர்கள் வசம் 15 கிலோ வெள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று ஆடி மாதம் அம்மனுக்கு முழு வெள்ளிக் கவசம் அணிவிப்பது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை ராஜகாளியம்மன் திருக்கோயில்,  சிம்மவாஹினி மகளிர் குழுவினர் பொதுமக்கள் நன்கொடை மூலம் செய்து வருகின்றனர்.  தொடர்ந்து வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் சிறப்பு யாகம் நடத்தி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT