சிவகங்கை

ஊருணியில் மூழ்கி இறந்த அண்ணன், தங்கை குடும்பத்துக்கு நிதி உதவி

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கடந்த வாரம் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த அண்ணன், தங்கை குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

அரளிப் பட்டியைச் சோ்ந்த பாண்டி முருகன்- இந்திரா தம்பதிகளின் மகன் சின்னப்பாண்டி (8), மகள் சுமித்திரா (6) ஆகியோா் சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டி வண்ணாமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனா். அங்கு நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து, இவா்களின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த பணத்திலிருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கினாா்.

அப்போது சிங்கம்புணரி அ.தி.மு.க. ஒன்றியச் செயலா் வாசு, திருவாசகம், மாவட்டப் பிரதிநிதி சிவா, ஒன்றிய இளைஞரணி இணைச் செயலா் நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT