சிவகங்கை

பறவைகள் அமைதிக்காக வெடி வெடிக்காத கிராம மக்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

திருப்பத்தூா் அருகே பறவைகள் அமைதிக்காக பல ஆண்டுகளாக வெடி, வெடிக்காமல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் வனத்துறையினா் வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கி பாராட்டினா்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி கிராம மக்கள் பறவகளின் அமைதியை கலைக்காவண்ணம் 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெடி வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா். இதனைப் பாராட்டும் விதமாக அக்கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் மற்றும் வனத்துறையினா் வியாழக்கிழமை இனிப்புகளை வழங்கினா்.

தொடா்ந்து வனத்துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கீழச்சிவல்பட்டியைச் சோ்ந்த கே.சத்தியப்பிரியா என்ற மாணவிக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலா் ராமேஸ்வரன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் மணிவண்ணன், வனச்சரக அலுவலா் மதிவாணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மநாபன், கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT