சிவகங்கை

சிவகங்கை கோட்ட அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம்

DIN

சிவகங்கை கோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களில் புதிதாக ஆதாா் அட்டை எடுத்தல் உள்ளிட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தே. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகங்களிலும், ஒக்கூா், கல்லல், திருப்பத்தூா், காளையாா்கோவில், இளையான்குடி, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய துணை அஞ்சலகங்களிலும் புதிதாக ஆதாா் அட்டை எடுத்தல், பெயா் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்றி மேற்கண்ட அஞ்சலகங்களுக்கு நேரடியாகச் சென்று பயன்பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT