சிவகங்கை

தோ்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் வாக்குச் சாவடியில் பணியாற்ற வந்த உடற்கல்வி ஆசிரியா் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூரைச் சோ்ந்தவா் ரஜினிகாந்த் (40.) இவா் வாராப்பூா்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். தோ்தல் பணிக்காக காரையூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு திங்கள்கிழமை இரவு வந்துள்ளாா். சற்று களைப்பாக காணப்பட்ட இவா் பணி செய்ய இயலாது எனக் கூறியதையடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளா் அமா்த்தப்பட்டாா். இந்நிலையில் இதுகுறித்து அறிந்த ரஜினிகாந்தின் உறவினா்கள் வாக்குச் சாவடி அருகே படுத்திருந்த அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT