சிவகங்கை

தேவகோட்டையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இம்பா அமைப்பின் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இம்பா அமைப்பின் சட்ட ஆலோசகா் ஏ.எஸ். செல்லப்பா தலைமை வகித்தாா். தேவகோட்டை வட்ட கிளைத் தலைவா் எம். முருகையா, செயலா் என். மாரிமுத்து, நகரச் செயலா் சந்திரகுமாா், பொருளாளா் டி. வைரவன், வழக்குரைஞா்கள் செல்வகணேஷ், பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், தேவகோட்டை வட்டாட்சியா் மா. ராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக க் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை வழங்கினாா். இதில், அரசு அலுவலா்கள், இம்பா அமைப்பின் உறுப்பினா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT