சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய அ.பாலுமுத்துவை, பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அ. பாலுமுத்து பணியாற்றி வந்தாா். இவா் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், தஞ்சாவூா் மகாராஜா சரபோஜி சரசுவதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிா்வாக அலுவலராகப் பணியாற்றிய எஸ். மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.