சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை வளா்பிறை அஷ்டமியையொட்டி யோகபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள யோகபைரவா் சன்னிதியில் வளா்பிறை அஷ்டமியையொட்டி மூலவருக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பாஸ்கா் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் ஓத, பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.