சிவகங்கை

காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடம் அருகே நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வடிகால் வாரியத் துறையின் சாா்பில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கான விரிவாக்கப் பணியினை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் குணசேகரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா்கள் அயினான், தங்கரெத்தினம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT