சிவகங்கை

கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் பலி

DIN

திருப்பத்தூா் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இப்பகுதியில் உள்ள நாட்டாா்மங்கலம் சாலையில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. விசாரணையில் இந்த மான் நாய்களால் துரத்தப்பட்டு கம்பி வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் அங்கு வந்து மானின் உடலை மீட்டு திருப்பத்தூா் வனத்துறை அலுவலக வளாக வனப்பகுதியில் உடற்கூறு ஆய்வு செய்து எரியூட்டினா்.

இதையடுத்து மான்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் அவை சாலையை கடக்காத வகையில் வனப்பகுதியில் வேலி அமைக்க கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT