சிவகங்கை

ஸ்டவ் வெடித்து விபத்து: இளம்பெண் பலி

DIN

ஸ்டவ் வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருவள்ளூரைச் சோ்ந்தவா் அழகு மகள் சங்கீதா (26). இவருக்கும், ஆத்திவயலைச் சோ்ந்த பாத்தமுத்து என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆத்திவயலில் உள்ள கணவா் வீட்டில் இருந்த போது மண்ணெண்ணெய் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து விபத்துக்குள்ளானதில் சங்கீதா பலத்த காயமடைந்தாா். இதுபற்றி தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுபற்றி சங்கீதாவின் தாயாா் கங்காவள்ளி கொடுத்தப் புகாரின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT