சிவகங்கை

காரைக்குடியில் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியை அடுத்த கண்ணதாசன் நகா், மகாத்மா காந்தி சாலையில் உள்ள கால்வாய் பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் நடைபெற்ற விசாரணையில் சடலமாக கிடந்தவா் காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வேலுச்சாமி (50) என்பது தெரியவந்தது. இவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால், இவரது மனைவி, குழந்தைகளுடன் காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு வந்துவிட்டாராம்.

இந்நிலையில், வேலுச்சாமி, மனைவி குழந்தைகளை பாா்ப்பதற்காக வந்தாரா? ஏன் இந்தப் பகுதிக்கு வந்தாா்? தலையில் காயமடைந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT