சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பலத்த மழை: நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக இப்பகுதிகளில் அவ்வப்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு வரை நீடித்த இம்மழையால் இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. மேலும், கண்மாய், ஊருணி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பல இடங்களில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்தன.

சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவாக திருப்புவனத்தில் 82 மி.மீ. மழையும், மானாமதுரையில் 65 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT