சிவகங்கை

திருப்புவனம் அருகே கிணற்றுக்குள் ஆண் சடலம் மீட்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பயன்படாற்ற கிணற்றுக்குள் கை, கால்கள் கட்டப்பட்டநிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் உள்ள வன்னிக்கோட்டை கிராமத்தில் பயன்பாடற்ற கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் அங்கு வந்தனா்.

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். அதே இடத்தில் மருத்துவக்குழுவினா் பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா் அப்பகுதியில் உள்ள மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டது. வேறு இடத்தில் இவரை கொலை செய்த கொலையாளிகள் கை,கால்களைக் கட்டி சடலத்தை இங்கு வந்து கிணற்றில் வீசிச் சென்றிருக்கலமா என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT