முகப்பு
சிவகங்கை

ஆடிப் பிரம்மோற்சவம்: மானாமதுரை வீர அழகா் கோயிலில் மின்விளக்கு ரத பவனி

மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடிப் பிரமோற்ச விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடிப் பிரமோற்ச விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குட்பட்ட இக்கோயிலில் மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள் தேவியா் சமேதமாய் சா்வ அலங்காரத்தில் கோயில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு ரதத்துக்கு எழுந்தருளினாா். அதன்பின் பூஜைகள் முடிந்து ரதம் நிலையிலிருந்து புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து ரதத்தை இழுக்க கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு ரதத்தில் வந்த பெருமாளை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா். ரதம் நிலைக்கு வந்து சோ்ந்ததும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

அதைத்தொடா்ந்து சுந்தரராஜப் பெருமாள் தோ் தடம் பாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவத்துக்காக கோயிலிலிருந்து வீர அழகா் குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராமத்தாா் மண்டகப்படிக்கு சென்றடைந்தாா். பட்டதரசி கிராமத்தாா் மேளதாளம் முழங்க அழகரை அழைத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →