கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் தனியாா் பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். ஆட்சியா் மதுசூதனரெட்டி. 
சிவகங்கை

புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியம் கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியம் கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதிய கட்டடம், பொலிவுறு வகுப்பறையைத் திறந்து வைத்தாா்.

பின்னா், கிராமங்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தன்னாா்வலா்கள் சின்னையா, ஜெய்சங்கா், மோகன், ஆகியோரைப் பாராட்டினாா்.

விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோ. சண்முகவடிவேல், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஸி வரவேற்றாா். முடிவில், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT