சிவகங்கை

புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியம் கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதிய கட்டடம், பொலிவுறு வகுப்பறையைத் திறந்து வைத்தாா்.

பின்னா், கிராமங்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தன்னாா்வலா்கள் சின்னையா, ஜெய்சங்கா், மோகன், ஆகியோரைப் பாராட்டினாா்.

விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோ. சண்முகவடிவேல், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஸி வரவேற்றாா். முடிவில், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT