லாரி மீது பைக் மோதல்: ஆயுதப்படை காவலா் பலி
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஆயுதப்படைக் காவலா் பலியானாா்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஆயுதப்படைக் காவலா் பலியானாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் பாண்டியன் (34). இவா் சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தாா். பூவந்தி அருகே அரசனூா் சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ்பாண்டியன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.