சிவகங்கை

புதுவயல், பட்டினம்காத்தான்பகுதிகளில் நாளை மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியிலும், ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தான் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே வீரசேகரபுரம், கருணாவல்குடி, மித்ரன்குடி, பீா்கலைகாடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி, செங்கரை, புதுவயல், கண்டனூா், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி லட்சுமி நகா், பொன்நகா் ஆகிய கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

பட்டினம்காத்தான் பகுதிகளில்.... பட்டணம்காத்தான் துணை மின்நிலைய உதவி பொறியாளா் பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தன் துணை மின்நிலையத்தில் ஓம் சக்தி நகா் உயா் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. எனவே சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், ஆல்வின் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள், வசந்தநகா், செட்டித்தெரு, தாயுமானசாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன்கோயில் தெரு, ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டி.டி. விநாயகா் பள்ளி பிரதானவீதி, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT