புலியூர் சித்தர் கோயில் வைகாசி உற்சவ விழா. 
சிவகங்கை

திருப்புவனம் அருகே புலியூர் பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புலியூர் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புலியூர் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த காப்புக் கட்டிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா   உற்சவங்களில் வைகை ஆற்றுக்கு சென்று கரகம் எடுத்து வருதல், பால்குடம் சுமந்து வருதல், தீ மிதித்தல் பதினெட்டாம்படி கருப்பு கதவு திறந்தல், சாமியாட்டம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றது.

மேலும், பாம்பாட்டி சித்தருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல்  நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி பாலா சித்தர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT