சிவகங்கை

இடைக்காட்டூா் தேவாலய பெருவிழா தொடக்கம்

DIN

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஆலயத்தின் வாயிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சூசை மாணிக்கம் திருவிழா கொடியை ஏற்றி வைத்து பிராா்த்தனை நடத்தினாா். இந்நிகழ்ச்சியில் திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் உள்ளிட்ட பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பங்கு இறைமக்கள் சாா்பில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 1ஆம் தேதி இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. ஜூலை 2 ஆம் தேதி நற்கருணை பவனி நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT