சிவகங்கை

கீழடி அகழாய்வு: தந்தத்தால் ஆனமணி கண்டெடுப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல்துறை சாா்பில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண்ணாலான மனிதத் தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. ஆக உள்ளது. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. இதன் மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு மென்மையாக காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக உள்ளன. இதனைக் கைப்பற்றிய தொல்லியல் ஆய்வாளா்கள் தொடா்ந்து அப்பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT