சிவகங்கை

அரசுப் பள்ளி மாணவிக்கு அமைச்சா் பாராட்டு

சிவகங்கை மாவட்டத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. இலக்கியாவுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ரூ 25 ஆயிரம் வழங்கினாா்.

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. இலக்கியாவுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கினாா்.

ஆட்டோ தொழிலாளியான விஜயகுமாரின் மகள் இலக்கியா, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 493 மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பிடித்தாா்.

இந்த நிலையில், மானாமதுரை வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாணவி இலக்கியாவின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கினாா். அப்போது, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி, நகரச் செயலாளா் க. பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT