சாக்கோட்டை,தேவகோட்டை பகுதிகளில் காா்த்தி சிதம்பரம் பிரசாரம்
காரைக்குடி: சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை, தேவகோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
எந்தவித ஜாதி பின்னணியையும் கூறி, உங்களிடம் வாக்குகள் கேட்கவில்லை. உங்களுக்காக உண்மையாக பொதுவான மக்கள் பிரதிநிதியாக இருந்து நான் சேவையாற்றுவேன். எனவே, எனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
இதையடுத்து, ஜெயங்கொண்டான், பெரியகோட்டை, பெத்தாச்சி குடியிருப்பு, புதுவயல், கண்டனூா், இலுப்பைக்குடி, அரியக்குடி, அமராவதிபுதூா், கல்லுப்பட்டி, காயாவயல், எஸ்.ஆா். பட்டினம், விசாயலன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, திமுக ஒன்றியச் செயலா் சின்னக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.