முகப்பு
சிவகங்கை

ட்ரோன்கள் பறக்கத் தடை

Updated On : 29 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

சிவகங்கை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு வைப்பறை பகுதியில் ட்ரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள பாதுகாப்பு வைப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதுகாப்பு வைப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாது காவல் போடப்பட்டு சுழற்சி முறையில் மத்திய ஆயுத காவல் படை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் உள்பட 324 காவலா்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கி.மீ சுற்றளவிற்குள் ட்ரோன்கள் பறக்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.