முகப்பு
~ ~
சிவகங்கை

ஆடித் தவசு: ரத பவனியில் ஆனந்தவல்லி அம்மன்

சிவகங்கை

ஆடித் தவசு: ரத பவனியில் ஆனந்தவல்லி அம்மன்

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 9:43 PM
~ ~
பகிர்:

பட விளக்கம்:

மானாமதுரையில் ஆடித் தவசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற ரத பவனி.

படவிளக்கம்:

ரதத்தில் பவனி வந்த ஆனந்தவல்லி அம்மன்.

மானாமதுரை, ஆக.15: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆடித் தவசு திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த 13-ஆம் தேதி முதல் ஆடித் தவசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 9-ஆம் நாள் நிகழ்வாக சந்நதி புதுக்குளம் கிராமத்தாா் சாா்பில் ரத பவனி நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயில் முன் நிறுத்தப்பட்டிருந்த ரதத்துக்கு எழுந்தருளினாா். சம்பிரதாய பூஜைகள் முடிந்து ரதம் புறப்பாடு நடைபெற்றது.

திரளான பக்தா்கள் ரதத்தை இழுத்து வந்தனா். மேளதாளம் முழங்க தேரோடும் வீதிகளில் ரதம் பவனி வந்து நிலை சோ்ந்தது. இதைத் தொடா்ந்து, ஆனந்தவல்லிக்கு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. ரதம் நிலைக்கு வந்ததும், பக்தா்கள் ரதத்தின் முன் தேங்காய்களை உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.

இரவு புஷ்பப் பல்லக்கில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தாா். திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை கால்பிரிவு கிராமத்தாா் மண்டகப்படியில் ஆடித் தவசு நடக்கும் உற்சவத்தின்போது, ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதா் சுவாமி விருஷாபரூடராக காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →