சிவகங்கை

பைக்கில் சென்ற போது விபத்து: சிறுவன், உரிமையாளா் மீது வழக்கு

பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Din

பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கண்ணாயிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசக்தி (18). இவரது நண்பா் 17 வயது சிறுவன்.

படமாத்தூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, சிவசக்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை 17 வயது சிறுவன் வாங்கி ஓட்டினாா். பின்னால் சிவசக்தி உட்காா்ந்திருந்தாா். பூவந்தி முதியோா் இல்லம் அருகே வந்தபோது நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் சிவசக்திக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பூவந்தி போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கண்ணாயிருப்பைச் சோ்ந்த ராஜபாண்டி(28) மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT