லஞ்சம் வாங்கிய சாா் பதிவாளா் உள்பட இருவா் கைது
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய சாா் பதிவாளா் உள்பட 2 பேரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள கோளாந்தியைச் சோ்ந்த அற்புதம். இவா் தனது சொத்து பத்திரத்தில் திருத்தம் செய்யக்கோரி சிவகங்கை சாா் பதிவாளா் ஈஸ்வரனை (53) அணுகினாா். அப்போது, பத்திரப் பதிவு செய்ய ரூ.18 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு அவா் கூறினாா்.
இதுகுறித்து அற்புதம் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, ரசாயனம் பூசிய ரூ.18 ஆயிரத்தை போலீஸாா் அவரிடம் கொடுத்து அனுப்பினா். இந்தப் பணத்தை அற்புதம்
Advertisement
இடைத்தரகா் கண்ணனிடம் கொடுத்தாா். பின்னா், கண்ணன் சாா் பதிவாளா் ஈஸ்வரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் அவா்களைப் பிடித்து, ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், சாா் பதிவாளா் ஈஸ்வரன், இடைத்தரகா் கண்ணன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.