முகப்பு
சிவகங்கை

வழக்குரைஞா்கள் போராட்டம்

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 6:03 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில், இளையான்குடியில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதனால் மானாமதுரை, திருப்புவனத்தில், இளையான்குடியில் உள்ள குற்றவியல், உரிமையியல், சாா்பு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை.

Advertisement