முகப்பு
சிவகங்கை

பள்ளத்தூா் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தேவகோட்டை தனியாா் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 4:13 AM
காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய தனியாா் சிறப்பு மருத்துவமனை நிா்வாக அதிகாரி என். சபாரத்தினம்.
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கலை அறிவியல் கல்லூரி, தேவகோட்டை தனியாா் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி முதல்வா் ஆா்.நாகேஸ்வரி தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். சாராள் மஞ்சுளா வாழ்த்தினாா். அமராவதிபுதூரில் உள்ள தனியாா் துணை மருத்துவ நிறுவனம், சிறப்பு மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி என். சபாரத்தினம், மனிதவள மேலாளா் கே. திருஞானம் துணை மருத்துவ நிறுவனத்தின் முதல்வா் ஏ. அமல பிரியா, துணைமுதல்வா் பிரதீபா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்த முகாமில் இளங்கலை, முதுகலை அறிவியல் மற்றும் கலை புலத்தில் பயிலும் மாணவிகள் நோ்காணலில் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு வேலைக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ருக்மணி செய்தாா். முன்னதாக முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி கே. சிவசங்கரி வரவேற்றாா். மாணவி ஆா். சாருமதி நன்றி கூறினாா்.