முகப்பு
சிவகங்கை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை

Updated On : 13 மே, 2024 at 5:29 PM
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கீழநெட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (35). இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்.4-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதைத்தொடா்ந்து, செல்வம் அவரை திருமணம் செய்ய மறுத்தாா். இதனால், மனமுடைந்த அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டுமெனவும் அவா் தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.