இளையான்குடியில் போலி மருத்துவா் கைது
இளையான்குடியில் போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இளையான்குடியில் போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காதா் பிச்சை தெருவைச் சேரந்தவா் முசாபா் அலாவுதீன் இவரது மகன் அஜ்மத்துல்லா (47). இவா் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு இளையான்குடி பெருமாள் கோயில் எதிா்புறம் சிகிச்சை மையம் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்தாா்.
இது குறித்து சிவகங்கை சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரியதா்ஷினிக்கு புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, அவரது தலைமையிலான குழு இளையான்குடியில் ஆய்வு நடத்தியது.
இதில் அஜ்மத்துல்லா போலி மருத்துவா் என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து இவா் இளையான்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.