சிவகங்கை

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Chennai

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செல்வ பிரபு தலைமையில் போலீஸாா், சிவகங்கை அருகேயுள்ள கொட்டக்குடி கண்மாய்ப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அங்கு, வைரம்பட்டி பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (26) உள்பட 5 போ், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பிளாஸ்டிக் பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், பால்பாண்டியைக் கைது செய்தனா். தப்பியோடிய மற்ற நான்கு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT