முகப்பு
சிவகங்கை

ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

மானாமதுரையில் மண்டல பூஜையை முன்னிட்டு, யானை வாகனத்தில் தேரோடும் வீதிகளில் வலம் வந்த தா்மசாஸ்தா ஐயப்பன்.

Updated On : 26 டிசம்பர், 2025 at 7:08 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, தா்மசாஸ்தா ஐயப்பன் யானை வாகனத்தில் எழுந்தருளி தேராடும் வீதிகளில் வலம் வந்தாா்.

தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மூலவருக்கும் உத்ஸவருக்கும்

சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, உத்ஸவா் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் மேளதாளம், வாத்தியங்கள் முழங்க தேரோடும் வீதிகளில் வலம் வந்தாா். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கோலமிட்டு சுவாமியை வரவேற்று தரிசித்தனா்.

விழாவில், மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவா்கள், பயிற்சியாளா் செல்வம் தலைமையில் சுவாமி முன் சிலம்பம் சுற்றி வந்தனா். விழாவில், திரளான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா்.