முகப்பு
சிவகங்கை

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

Updated On : 13 நவம்பர், 2025 at 7:45 PM
பகிர்:

சிவகங்கை அருகே சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள அதப்படக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் சமய பிரபு (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த சமய பிரபு கோவைக்குச் செல்வதற்காக நண்பா் மணிகண்டனுடன் (18) இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது, பையூா் குடியிருப்பு அருகே கேரளத்திலிருந்து வந்த லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, சமய பிரபு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →